உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், 131 450 என்ற எண்ணில் மொழிபெயர்த்தல் மற்றும் மொழிபெயர்த்துரைத்தல் சேவையை அழைக்கவும்.
நீங்கள் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
கோவிட்-19 நோய்த்தொற்றினால் மக்கள் மிகவும் நோய்வாய்ப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதில் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை. வைரசுக்கு எதிராக அதிகபட்ச பாதுகாப்பை உறுதிசெய்யத் தடுப்பூசிகளைப் பற்றிய அவ்வப்போதைய செய்திகளை நீங்கள் அறிந்திருப்பது அவசியமாகும். தகுதியுள்ளவர்களுக்கான அவ்வப்போதைய செய்திகள் என்பதன் பொருள் என்னவென்றால், நீங்கள் முதன்முறையாக கோவிட்-19 தடுப்பூசி ஒன்றையும், பரிந்துரைக்கப்பட்ட நோயெதிர்ப்பு ஊக்க மருந்தளவையும் (booster dose) பெற்றுள்ளீர்கள் என்பதாகும்.
தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது எப்படி
உங்கள் உள்ளூர் மருந்தகத்திலும், பொதுமருத்துவரிடமும் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
உங்களுக்கு ஏற்கனவே உடல்நலப் பிரச்சினைகள் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு எத்தனை மருந்தளவுகள் தேவை என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ, நீங்கள் ஒரு பொது மருத்துவரிடம் (GP) பேச வேண்டும்.
தடுப்பூசிகள் இலவசம், தடுப்பூசி போடுவதற்கு உங்களுக்கு 'மெடிகேர்' அட்டை (Medicare card) தேவையில்லை.
யார் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம்
5 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதற்கான தகுதியுடையவர்களாவர். 6 மாதங்கள் முதல் 5 வயதுக்குட்பட்ட சில தகுதியான குழந்தைகளும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் ஒரு நோயெதிர்ப்பு ஊக்க மருந்தளவு (booster dose) கிடைக்கிறது, அத்துடன் இது பின்வருபவர்களுக்குப் பலமாகப் பரிந்துரைக்கப்படுகிறது:
- 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
- 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய உடல் ஊனமுற்ற, அல்லது சிக்கலான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள்
‘ஓமிக்ரான்’ திரிபுகளைக் (Omicron variants) குறியிலக்காகக் கொண்ட ஒரு புதிய ஈரிணைத் திறன் (bivalent) தடுப்பூசியானது நோயெதிர்ப்பு ஊக்க மருந்தளவாகக் (booster dose) கிடைக்கிறது.
உங்கள் கடைசி கோவிட் மருந்தளவுக்கு அல்லது நோய்த்தொற்றுக்கு 6 மாதங்களுக்குப் பிறகு, உங்கள் நோயெதிர்ப்பு ஊக்க மருந்தளவை (booster dose) நீங்கள் பெறலாம்.
உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எத்தனை மருந்தளவுகள் தேவை மற்றும் எந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது என்பதைப் பற்றிப் பொது மருத்துவருடன் (GP) பேசவும். மேலதிகத் தகவல்களுக்குத் தடுப்பூசி என்ற பக்கத்துக்குச் செல்லவும்.
உங்கள் தடுப்பூசிக்குப் பிறகு
ஊசி போட்ட இடத்தில் வலி, சோர்வு, தசைவலி, காய்ச்சல் அல்லது குளிர் காய்ச்சல் மற்றும் மூட்டு வலி போன்ற பக்க விளைவுகள் உங்களுக்கு இருக்கலாம். பக்க விளைவுகள் இயல்பானவை, அவை தடுப்பூசி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகும். அவை பொதுவாக இலேசானவை, அத்துடன் ஒரிரு நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும்.
கடுமையான பக்க விளைவுகள் மிகவும் அரிதானவை. உங்களுக்குக் கவலை இருந்தால் அல்லது ஒரு சில நாட்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் ஏதேனும் நீங்கவில்லை என்றால், உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி
அனைத்து தடுப்பூசிகளும் ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுவதற்கு முன், 'ஆஸ்திரேலிய சிகிச்சை பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட, கடுமையான பாதுகாப்பு தரநிலைளைப் பூர்த்தி செய்ய வேண்டும். அவை தகுதிவாய்ந்த சுகாதார மருத்துவர்களால் போடப்படுகின்றன.
ஆஸ்திரேலியாவில் கிடைக்கின்ற மற்றும் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 3 வகையான தடுப்பூசிகள் பின்வருமாறு:
- ‘ஃபைசர்’ (Pfizer)
- 'மாடர்னா' (Moderna)
- 'நோவாவேக்ஸ்' (Novavax)
மக்கள் தங்கள் வயது மற்றும் மருத்துவ நிலைமை போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு தடுப்பூசிகளைப் பெறலாம். எந்தத் தடுப்பூசி உங்களுக்குச் சரியானது என்பதை அறிந்துகொள்ளப் பொது மருத்துவர் (GP) ஒருவரிடம் பேசவும்.
மேலதிகத் தகவல்கள்
சுகாதாரச் சேவை கண்டுபிடிப்பானைப்(Health Direct Service பயன்படுத்தி உங்கள் அடுத்த மருந்தளவை பொது மருத்துவரிடமோ அல்லது உள்ளூர் மருந்தகத்திலோ பதிவு செய்துகொள்ளவும். மேலதிகத் தகவல்களுக்கு, தேசிய கொரோனாவைரஸ் உதவி இணைப்பை 1800 020 080 என்ற எண்ணில் அழைக்கவும்.
Reviewed 27 July 2023